TAMIL CATHOLIC PAGE - FRANCE

maraikal
MUM
         
அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். யோவான் 3:15
 

 
 
 

இளையோர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

        

ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France

மூவேளை செபம்   

பணியகத்தின் செயல்பாடுகள் 2022



தவக்காலத்தில் பாரம்பரிய பாடல்
தவக்காலம் என்றால் என்ன?

ஒப்புரவுப் பாடல்கள்
திருச்சிலுவைப் பாதை

1   2   3   4   5   6  7   8   9   10  11   12  13  14  15   16  17

18  19   20  21  22  23  24   25  26   27  28 29


 

திருநீற்றுப்புதன்
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்”
துறவுநிலை


நம் மண் துறவுநிலையை போற்றும் மண். துறவு நிலையை அடைய முடியாதவர்கள் கூட சாமிக்கு மாலை போடும் அந்த 40 நாட்கள் சாமியாகிவிடுகிறார்கள். ஒட்டி காலுக்கு மிதியடி இல்லை. காலையில் உணவு இல்லை. இறைச்சி இல்லை. மது இல்லை. புகையிலை இல்லை.

துறவுநிலையை நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் அனுபவித்துப் பார்க்க எல்லா மதங்களும் இடம் கொடுக்கின்றன.
சைவ மரபில் மாலை அணிவது,
இஸ்லாம் மரபில் ரமலான் நோன்பு,
கிறிஸ்தவ மரபில் தவக்காலம்.

நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம்.


தவக்காலம் நமக்கு சொல்வது என்ன?


நம் கடவுள் இரண்டாம் வாய்ப்புக்களின் கடவுள். முதல் ஏற்பாட்டில் யாக்கோபு, இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் ஏற்பாட்டில் சக்கேயு, ஊதாரி மகன் என நமக்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. 'ஐயோ, என் வாழ்க்கை முழுவதும் வீணாயிற்றே!' என்று இறப்பின் தருணத்திலும் இருந்த கள்வனுக்கும் இரண்டாம் வாய்ப்பு தரப்படுகிறது. ஆக, இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும், எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இறைவனை நெருங்கி வரலாம். அவர் நம் சிலேட்டைத் துடைக்கக் காத்திருக்கிறார்.

இது அன்பின் காலம். 'இதைச் செய்ய மாட்டேன். அதைச் செய்ய மாட்டேன்' என முடிவெடுக்கும் காலம் மட்டுமல்ல இது. 'இதைச் செய்வேன். அதைச் செய்வேன்.' என உறுதிசெய்யும் காலமும் இது. 'அடுத்தவரிடம் சண்டையிட மாட்டேன், கோபப்பட மாட்டேன்' என்று நினைப்பதுபோல, 'புதிய நபர்களை சந்தித்து பேசுவேன், புதிய நண்பர்களை சேர்த்துக்கொள்வேன், பழைய நட்பை புதுப்பிப்பேன், அடுத்தவரை தேடிச்செல்வேன்' என நேர்முகமாகவும் யோசிக்க வேண்டிய காலம் இது.

இல்லாமை. பீடத்தில் இந்த நாட்களில் பூ வைப்பதில்லை. பீடம் வெறுமையாக இருக்கும். இயேசுவின் இறப்பை பற்றியே சிந்தனைகள் இருக்கும். எதற்காக? நாம் வாழ்வதே இறப்பதற்குப் பழகத்தான் என்பது என் நம்பிக்கை. நல்ல இறப்பு என்பது நல்ல சிற்பம் போல. ஒரே நாளில் சிற்பம் உருவாகிவிடுவதில்லை. பல அனுபவங்களால் நம்மை நாமே பக்குவப்படுத்தி இறக்கத் தயாராகிறோம். ஆனால். இறப்பு என்னும் சுரங்கப்பாதையின் முடிவில் உயிர்ப்பு என்னும் வெளிச்சம் இருக்கிறது என்பது தவக்காலத்தின் முடிவில் நாம் கொண்டாடும் உயிர்ப்பு விழா தரும் நம்பிக்கை.

கடவுளே மகிழ்ச்சி. இந்த நாட்களில் சில பெண்கள் பொட்டணவதில்லை. பூ அணிவதில்லை. சிலர் செருப்புகள் அணிவதில்லை. சிலர் முகச்சவரம் செய்வதில்லை. இவை எல்லாம் வெறும் அடையாளங்களே. ஆனால் அடையாளத்தையும் தாண்டி உட்பொருளை நாம் உணரவேண்டும். எனக்கு இன்பம் தருபவை இவைகளாக இருந்தாலும், மகிழ்ச்சி தருபவர் இறைவனே என உணர்கின்ற காலம் இக்காலம். நம் இறைவன் நாம் இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என நினைக்கின்ற இறைவன் அல்லர். கொஞ்ச நேர இன்பத்தை விற்கும் வியாபாரிகளிடம் நம்மை நாமே விற்றுவிடக்கூடாது என்கிறார் அவர்.

ஒறுத்தல். இது எதற்காக? வாழ்வின் எந்தவொரு வளர்ச்சியும் ஒருவித தியாகம் மற்றும் வலியில்தான் நடக்கிறது. தியாகமும், வலியும், வசதியின்மையும்தான் நாம் வளர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. புதிய மொழி கற்பதாலும் சரி, புதிய திறனை வளர்ப்பதாலும் சரி, நமக்கு வலிக்கத்தான் செய்யும். வலியில்லாமல் வருவது நீண்ட காலம் நிலைப்பதில்லை. அதில் நம் மனம் லயிப்பதில்லை. வலியோடு வருவது நம்மை விட்டு எளிதில் நீங்குவதில்லை. ஒருவேளை நோன்பு இருக்கிறோம் என்றால், அந்த நோன்பு நம் மனித வலுவின்மையை நமக்கு நினைவூட்டுகிறது. நம் நோன்பால் எல்லாரும் பசியாறிப்போவதில்லைதான். ஆனால், மனிதரின் நிர்வாணத்தை மனிதருக்கு தோலுரிப்பது ஒரு வேளை விரதம்தான்.
இந்த தவக்காலம் நமக்கு அருளின் காலமாக அமைவதாக!

 


திருநீற்றுப் புதன்

 

இயேசுவோடு சேர்ந்து பயணித்து, நம்மைப் புதுப்பித்துக் கொண்டு இயேசுவின் பாஸ்காப் பலியை அர்த்தமோடு கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலம்.

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் நம்மைத் தொட்டுச் செல்லுகின்றது. நம்மைத் தொட்டுச் செல்லும் இத்தவக்காலம் நமக்கு விட்டுச் செல்லும் அழைப்பும், சிந்தனைகளும் அற்புதமானவை. கால மாற்றத்தால் கரைபட்டும் கறைபட்டும் போக முடியாத, மனித சிந்தனைகளால் மாற்றப்படவும், மறுக்கப்படவும் முடியாத ஆன்மிகப் பண்புகளையும், விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற இத் தவக்காலம். மனிதர் தமது வாழ்வைப் பசுமைப்படுத்த ஒரு சிறப்பான காலமாக அமைகின்றது. ஒரு வகையில் பார்த்தால் தவக்காலம் என்பது மனித வாழ்விற்கு ஒரு வசந்த காலமே. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, வளமையும், மகிழ்ச்சியும் ஏற்பட நமக்கு வழிகளைத் திறந்து விடும் காலம் தவக்காலமே.

எனவே என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண் முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன் என்று உணர்ந்து, அதனை ஏற்றுக் கொண்டு, வாழ்வு மாற்றத்திற்காய் நம்மை அர்ப்பணித்தவர்களாய் மாறுவோம்

 
இறையேசுவில் இனிமையான உறவுகளே!

கிறிஸ்து பிறப்பு "உலகிற்கெல்லாம் பெரு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி" (லூக் 2:10) என்று கருதப்படுகின்றது. மகிழ்ச்சி காரணத்தை உள்ளடக்கியது. காரணமற்று சிரிப்பவர்களை மனநோயாளிகள் என்றுதானே உலகம் கருதுகின்றது. கிறிஸ்து பிறப்பினால் ஏற்படுகின்ற மகிழ்சியின் காரணம் என்ன என்று யோசித்தால், வானதூதர்களின் வாழ்த்துச் செய்தியிலேயே அதற்கான பதில் இருக்கின்றது “இன்று ஆண்டவராகிய மெசியா நமக்காக பிறந்திருக்கின்றார்” (லூக் 2:11).

'நமக்கானது' என்ற சொல்லில்தான் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கின்றது. 'என்னுடையது' என்பது சுயநலத்தைச் சுட்டுவதாக இருக்கின்றது. ஆனால், “நம்முடையது” என்பது பொதுமையின் பெருமிதமாக. இருக்கின்றது. கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர்,. ஆனால், அந்த பொதுமைவாதி, "நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்து” (விப 19:5) என்று மார்தட்டிக் கொண்டு "தமக்குரியவர்களிடம் வந்தார்” (யோவா 1:11) என்பதைச் எடுத்தியம்புவதே கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

“கடவுள் வந்தார்” இதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி பொதிந்து கிடக்கின்றன. தேடி வந்தவர் கடவுள். "பற்றற்றான்" என்று திருவள்ளுவர் சுட்டிக்காட்டும் கடவுள், நம்மீது பற்று கொண்டவராய் நம்மைத் தேடி வருகின்றார். உயரே இருக்கும் நீர், தாழ இருக்கும் நிலத்தை நோக்கிப் பாய்ந்து அருவியாவது போல, ஆறாய் பாய்ந்து ஊடறுத்து ஓடுவது போல, கடவுள் பாவம், சாபம், தனிமை, தவிப்பு உள்ளிட்ட எல்லா தடைகளையும் வேறறுத்து நம்மிடம் வாழும்படி பாய்ந்து வருகின்றார்.

வறண்ட நிலங்களால், வானுக்கெந்த நன்மையுமில்லை. ஏனென்றால், அவை வெம்மையைத்தான் மேலெழுப்புகின்றன. ஆனாலும், அவற்றின் வெம்மை தணிக்க வான் மழைப்பொழிவதுபோல, மனிதர்களினால் தனக்கெந்த நன்மையும், பொறுமையும், வளமையும் கிட்டாத போதும், அவர்களின் மனம் குளிரச் செய்யும் வான்மழையாய் வந்திறங்கினார் கடவுள் என்னும் செய்தி, கிறிஸ்து பிறப்பு கால மகிழ்வை அதிகரிக்கச் செய்யும்தானே!

“நம்மை தேடி” இந்த வார்த்தைகளில்தான் எத்துணை அற்புதம்! எத்துணை எத்துணை ஆனந்தம்! எந்தவொரு விளக்கமும் இல்லாமல், நம்மால் உணரப்படக்கூடிய வார்த்தைகளல்லவா இவைகள்! வழியற்று, வழி காணும் வழியிற்று, அதை உணரும் மதியற்று, தாயற்ற சேயாய், பாழ்வெளியில் பயனற்று நிற்கும் ஒருவனுக்கு உதவும்படி ஒருவர் தேடி வருவார் என்றால், அதைவிட அவருக்கு கிடைக்கும் ஆனந்தம் வேறென்ன? தாய் மண்ணை விட்டு மற்றொரு இடத்தில் இருக்கும் எவரொருவரும் உணரும் வெறுமையை, அவரைத் தேடி வரும் ஒருவரால் மாற்றிவிட முடியும். தன்னைத் தேடி, தன் இனத்தார் ஒருவர் வருகின்றார் என்னும் நிகழ்வே, தன் மண்ணில் தான் வாழும் சுகத்தை ஒருவருக்கு வழங்கிவிடும். பாலன் இயேசு இந்த காலத்தில், நம் இனத்தாராக, நம்மைத் தேடி, நம்மிடம் வருகின்றார். இந்த கணம் நம் மண்ணில் நாம் வாழும் சுகத்தை, நம் மண்ணின் சுகந்தத்தை நமக்குத் தரட்டும்.

கிறிஸ்து பிறப்பு உணர்வு மட்டுமல்ல, அதுவொரு அனுபவம். உணர்வுக்கு நாம் மட்டும் போதும். அனுபவத்திற்கு அடுத்தவரும் வேண்டும். ஆண்டவரின் அனுபவத்திற்கு அவருக்கு நாம் தேவைப்பட்டோம். நாமும் அந்த கிறிஸ்து அனுபவத்தைப் பெற அடுத்தவரைத் தேடுவோம். கிறிஸ்து பிறப்பு பெருமகிழ்வு உங்கள் உள்ளத்தையும், இல்லத்தையும்
நிரப்பட்டும்.


உறவில் நிலைக்கும்,
அருள்பணி: போல் மத்தியு மதன்ராஜ் அ.ம.தி.



 

மார்ச் மாத திருப்பலிகள் 

24-03-2024 - திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

07:45 - Eglise St. Eloi - 2 Rue Perotin  -  75500 - Chelles

07:45 - Eglise Ste.Genivieve - 22 Rue Colonel Fabion  -
             95140   Garges Sarcelles

10:15 - Eglise St.Jean - 60 Rue Ascq - 95100 Argenteuil

12:00 - Eglise St.Martha - 3, Rue Condoreet 93500 - Pantin
             Aubervilliers

12:30 - Eglise St. Joseph des Nations -  154 Rue St.Maur  - 
             Goncourt – 75011 - Paris


12:30 - Eglise Notre Dame - 35 Av. de la république 93150 -
             Blanc - Mesnil  

16:45 -Eglise St.Christophe-4,Rue Felix Faur 94000-Créteil    

17:00 - Eglise St.Marie - 4,Rue du Berry 93330 - Neuilly Sur
              Marne


 

28-03-2024 - புனித வியாழன் திருப்பலி
18:30  - ஒப்புரவு அன்னை சிற்றாலயம்
              Belleville – 75011 – Paris

 

29- 03-2024 புனித வெள்ளி வழிபாட
16:00  -  Eglise St. Joseph des Nations  Goncourt – 75011 - Paris

 

30- 03-2024 பாஸ்காத் திருவிழிப்பு

18:00 -  Eglise St. Joseph des Nations  Goncourt – 75011 - Paris

18:00  - Eglise Ste.Genivieve - Garges Sarcelles

 

31- 03-2024 ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா

12:30 - Eglise Notre Dame - 35 Av. de la république 93150 -
             Blanc - Mesnil  

12:30 - Eglise St. Joseph des Nations  Goncourt – 75011 -
             Paris

17:00 - Eglise St.Marie - 4,Rue du Berry 93330 - Neuilly Sur
              Marne

 

ஏப்ரல் மாத திருப்பலி

07-04-2024 -இறை இரக்கப் பெருவிழா

17:00   Eglise St.Martha - 3, Rue Condoreet 93500 - Pantin 
            Aubervilliers


அர்த்தமுள்ள ஆன்மீகம் - நலம் தரும் நம்பிக்கை

நோவாவின் கதை

வரலாற்றை உலுக்கிய திருமணம்

Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!

 


19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.


பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.


ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு
தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக் குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.


அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்." என்று கூறினார்.


இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.


இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.


சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன?

 

தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021

 

video/Fatima.mp4

மரியன்னையின் பிறப்பு

 

தவக்காலத் தியானங்களை இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும்

      தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4
 
 



அன்பான உறவுகளே!

எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும்,  கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.


உங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் குறிப்பிட்ட நிலைகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள்: கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Père: Paul Matthew MATHANRAJ

Aumônerie Tamoule Catholique Sri Lankaise
57 Boulevard de Belleville
75011 Paris
Tel: 0148069505


உங்களது நலத்திற்காகவும், மன உறுதிக்காகவும், இந்த சோதனைக்காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதற்காகவும் இறைவேண்டல் செய்கின்றோம்.
- நன்றி -

இணையதள பதிப்பாசிரியர்: சிவகுமாரன் றெஜீனா

 

Free Blog Widget
Stats Counter
hit counter