|
|
|
எஸ்ரா
1. பாரசீக மன்னன் சைரசு, ஜெருசலேமுக்கு திரும்பிச் சென்ற யூதர்களுக்கு என்ன கொடுத்தார்? நெபுக்கத்னேசர் ஜெருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து, தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தார். அவை அனைத்தையும் திருப்பிக் கொடுத்தார். (1:7) 2. இந்தப் பாத்திரங்கள் அனைத்தையும் யாரிடம் கொடுத்தார்? யுதாவின் தலைவரான் சேஸ்பட்சரிடம் (1:8) 4. ஜெருசலேமுக்கு திரும்பிச் சென்றவர்கள் எத்தனை பேர்? 42,360பேர் (2:64) 5. ஆண் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை என்ன? 7337 பேர். (2:65) 6. கோவில் வேலையை தொடங்கியவர்கள் யார்? செருபாபேல், ஏசுவா (3:8) 7. கோவில் கட்டும் பணியில் உதவி செய்ய முன்வந்தது யார்? சமாரியர்கள். (4:2) 8. சமாரியர்களின் உதவியை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லை. (4:3) 9. சமாரியர்களை பணிக்கு ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் செய்தது என்ன? யூதர்களுக்கு எதிராக, பாரசீக மன்னனுக்கு கடிதம் எழுதினர். (4:6) 10. பாரசீக மன்னன் செய்தது என்ன? கோவில் கட்டும் வேலையை நிறுத்தினார். (4:23) 11. யூதர்களுக்கு கோவிலைக் கட்டி முடிக்க அனுமதித்தது யார்? பாரசீக மன்னன் தாரியு (6:13) 12. எஸ்ரா என்பவர் யார்? இவர் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் மோசேயுக்கு அளித்திருந்த திருச்சட்ட நூலின் வல்லுனர். (7:6) 13. எஸ்ராவிற்கு பாபிலோனிலிருந்து ஜெருசலேமுக்குச் சென்றடைய எவ்வளவு காலம் ஆனது? 5 மாதங்கள். (7:9) 14. ஜெருசலேமுக்கு சென்றடைந்தபின் எஸ்ரா செய்தது என்ன? அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தை கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ராயேல் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். (7:10) 15. எஸ்ரா கட்டளைகளை எவ்வாறு ஆவணப்படுத்தினார்? பாரசீக மன்னன் எஸ்ராவுக்கு அதிகாரம் கொடுத்தார். (7:11) 16. இஸ்ராயேலுக்கு எஸ்ரா கொடுத்த ஆணை என்ன? வேற்றினப் பெண்களை மணந்தவர்களாக கண்டு பிடிக்கப்பட்டவர்களை விலக்கி விடுமாறு கூறினார். (10:18) |
|
Stats Counter hit counter |