|
|
|
யோபு | |
1. யோபு வாழ்ந்து வந்த இடம் இது? ஊசூ. (1:1) 2. யோபு எப்படிப்பட்ட மனிதர்? அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞசி தீயதை விலக்கி வந்தார்.(1:1) 3. யோபுவுக்கு எத்தனை மக்கள் இருந்தனர்? ஏழு புதல்வரும், 3புதல்வியரும். (1:2) 4. கடவுள் யோபுவைப்பற்றி சாத்தானிடம் கூறியது என்ன? யோபு நல்லவன், தீமையானதை விலக்கி நடப்பவன். (1:8) 5. சாத்தான் கடவுளிடம் கூறியது என்ன? "அவருக்குரியவற்றின் மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" (1:11) 6. யோபுவைச் சோதிக்க கடவுள் சாத்தானுக்கு அனுமதி அளித்தாரா? "ஆம், அவன் மீது மட்டும் கை வைக்காதே" என்றார். (1:12) 7. சாத்தான் செய்தது என்ன? யோபுவுக்கு இருந்த அனைத்து உடைமைகளையும் அழித்து விட்டது. (1:13-20) 8. யோபு கூறியது என்ன? "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்: அங்கே திரும்புகையில் பிறந்த மேனியாய் யான் செல்வேன்: ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (1:21) 9. கடவுள் யோபுவுக்கு என்ன கைமாறு அளித்தார்? ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். (42:10) 10. யோபு எவ்வளவு காலம் வாழ்ந்தார்? 140 ஆண்டுகள். (42:16) |
|
Stats Counter hit counter |