|
|
|
எசாயா | |
1. இறைவாக்கு உரைக்க கடவுள் எசாயாவை எப்போது தேர்ந்தெடுத்தார்? கி.மு. 740ல் 2. எசாயா அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன? இஸ்ராயேல் மற்றும் யூதாவின் வீழ்ச்சியை முன்னறிவிக்க. 3. எசாயா மக்களிடம் கூறியது என்ன? பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள். (1:2) 4. எசாயா மக்களைப் பார்த்து செய்யச் சொன்னது என்ன? "தீமை செய்தலை விட்டொழியுங்கள், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள், திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்". (1:16-17) 5. ஆண்டவர்முன் சேராபீன்கள் பாடிய பாடல் என்ன? படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர், மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது. (6:3) 6. ஆகாசுக்கு ஆண்டவர் அளித்த அடையாளம் என்ன? இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண், ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்.(7:14) 7. மேற்கூறிய வார்தைகள் யாரைக் குறிக்கிறது? மரியாவையும், அவர் மகன் இயேசுவையும். 8. வரவிருக்கும் இயேசுவைப்பற்றி எசாயா முன்னறிவித்தது என்ன? ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஒரு ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளார், ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேலிருக்கும்: அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர்" "வலிமை மிகு இறைவன்", "என்றுமுள்ள தந்தை", "அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும். (9:6) 9. திருமுழுக்கு யோவானைப்பற்றி எசாயாவின் இறைவாக்கு என்ன? குரலொலி ஒன்று முழங்குகிறது: பாலை நிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ் நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றை சீராக்குங்கள், பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலைக்குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடுமுரடானது சமதளமாக்கப்படும், ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்" (40:3-5) 10. எசாயா இறைவாக்கினர் மெசியாவின் காலத்தைதைப்பற்றி அறிவித்தது என்ன? "ஆண்டவராகிய என்தலைவரின் ஆவி, என்மேல் உள்ளது: ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடியலைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார்" . (61:1-2) 11. ஆண்டவரின் கடைசித் தீர்ப்புப் பற்றி எசாயா அறிவிப்பது என்ன? "அவர்கள் செயல்களையும், எண்ணங்களையும் நான் அறிவேன்: பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடி வந்து என்மாட்சியைக் காண்பார்கள்" (66:18) |
|
Stats Counter hit counter |