maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
எரேமியா
1. கடவுளால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
    "தாய்வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன்,
     நீ பிறக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்,
     மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்"
     (1:5)

2. எரேமியா குயவர் வீட்டில் இருக்கும்பொழுது கடவுள் கூறியது
    என்ன?

   "இந்தக் குயவர் கையிலுள்ள களிமண்ணைப்போல, இஸ்ராயேல்
     வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்" (18:6)

3. எரேமியாவை சிறையில் அடைத்தது யார்?

     பஸ்கூர் என்னும் குரு. (20:2)

4. எரேமியா கூறிய பதில் என்ன?
    "யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்:
      அவன் அவர்களை பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி  
     வீழ்த்துவான்". (20:4)

5. எரேமியா இயேசுவின் வருகையைப்பற்றிக் கூறியது என்ன?
    இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு 
     நீதியுள்ள "தளிர்" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி  
     செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார் (23:5)

6. எரேமியா சாகவேண்டுமென குருக்கள் கூச்சலிட்டது ஏன்?

     அவர் எருசலேமின் அழைவைப்பற்றி இறைவாக்கு உரைத்ததால்.
     (26:9)

7. உரியா என்பவர் யார்?
    அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன். இவரும்
    எரேமியாவைப் போல் எருசலேம் நகரின் அழிவைப்பற்றி 
     முன்னறிவித்தவர். (26:20)

8. உரியாவிற்கு நடந்தது என்ன?
    அவர் உயிருக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடினார். ஆனால் அவர்
     மீண்டும் கொண்டு வரப்பட்டு சாகடிக்கப்பட்டார். (26:21-23)

9. எரேமியா எவ்வாறு காப்பாற்றப்பட்டார்?
    அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார். (26:24)

10. எரேமியா தன் தோளின்மேல் நுகத்தை வைத்துக்கொண்டு மக்கள்
     முன் தோன்றியது ஏன்?

     அவர்கள் அனைவரும் பாபிலோனுக்கு அடிமையாவார்கள்
     என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவே. (27:6)

11. எரேமியா 31:33-34 ல் என்ன கூறுகிறார்?
      அந்நாள்களுக்குப் பிறகு, இசுரயேல் வீட்டாரோடு நான் 
      செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள்  
      உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி
      வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;அவர்கள் 
      என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல்
      எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு  
      அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். 
      ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை
      அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.   
     அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய
      பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்."

11. செதேக்கியாவுக்கு ஏற்பட்டது என்ன?
       பாபிலோனிய மன்னன் செதேக்கின் புதல்வர்களை அவன் 
       கண்முன்னாலே கொன்றான். மேலும் செதேக்கின் கண்களைப்
       பிடுங்கி அவரையும் கொன்றான். (39:6-7)

12. ஆண்டவரின் இல்லம் அழிக்கப்பட்டது எப்படி?
       பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் மெய்க்காப்பாளர்
       நெபுசரதான் ஆண்டவரின் இல்லத்தை தீக்கிரையாக்கினான்.
       (52:13)

13. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எத்தனைபேர்?
      4600பேர். (52:30)

 
Free Blog Widget
Stats Counter
hit counter