|
|
|
அபக்கூக்கு | |
1) அபக்கூக்கு என்னும் நூல் எப்பொழுது எழுதப்பட்டது? கி.மு. 600ல் 2) இந்நூலின் உள்ளடக்கம் என்ன? நேர்மையற்றோர், கொடியோர் ஆகியவர்களுக்கு தண்டணை வழங்க ஆண்டவர் கல்தேயர் இனத்தை தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி கூறுகிறது. (1:6) 3) இந்நூல் எவ்வடிவில் ஏற்றப்பட்டது? கவிதை மற்றும் ஊரையாடல் பாணியில் எழுதப்பட்டது. 4) நேர்மையுடையோர் எவ்வாறு வாழவேண்டும் என ஆண்டவர் கூறுகின்றார்? நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் வாழ்வார்கள் என்றும் ஆண்டவர் மறுமொழி கூறினார்.(2:4) 5) செல்வத்தைப் பற்றி இறைவாக்கினர் கருத்து என்ன? செல்வம் ஏமாற்றி விடும். (2:5) 6) அபக்கூக்கு 1:2 ம் அதிகாரத்தில் கூறுவது என்ன "ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?" 7) தீயவைகளென இறைவாக்கினர் குறிப்பிடுபவை யாவை? 1- தமக்கென அனைத்தையும் குவித்துக் கொள்வது. 2-பிறரை சாதகமாய் பயன்படுத்த கொடுமைப்படுத்துதல். 3-இரத்தப்பழியால் நகரைக் கட்டி அமைத்தல். 4-அடுத்தவரை குடிவெறியர்களாக்குதல் 5-சிலை வழிபாடு. (2:6-19) 8) அபக்கூக்கு 3:17-19 அதிகாரத்தில் கூறுவது யாது? "அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன். ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை; அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்; உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்." |
|
Stats Counter hit counter |