maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
அபக்கூக்கு

1) அபக்கூக்கு என்னும் நூல் எப்பொழுது எழுதப்பட்டது?
    
கி.மு. 600ல்

2) இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
   
நேர்மையற்றோர், கொடியோர் ஆகியவர்களுக்கு தண்டணை வழங்க 
    ஆண்டவர் கல்தேயர் இனத்தை தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி கூறுகிறது.
    (1:6)


3) இந்நூல் எவ்வடிவில் ஏற்றப்பட்டது?
   
கவிதை மற்றும் ஊரையாடல் பாணியில் எழுதப்பட்டது.

4) நேர்மையுடையோர் எவ்வாறு வாழவேண்டும் என ஆண்டவர் 
     கூறுகின்றார்?

   
நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் வாழ்வார்கள்
     என்றும் ஆண்டவர் மறுமொழி கூறினார்.(2:4)


5) செல்வத்தைப் பற்றி இறைவாக்கினர் கருத்து என்ன?
    
செல்வம் ஏமாற்றி விடும். (2:5)

6) அபக்கூக்கு 1:2 ம் அதிகாரத்தில் கூறுவது என்ன
 
"ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக்
   கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக்
   காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்;
    நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?"


 7) தீயவைகளென இறைவாக்கினர் குறிப்பிடுபவை யாவை?
   
1- தமக்கென அனைத்தையும் குவித்துக் கொள்வது.
    2-பிறரை சாதகமாய் பயன்படுத்த கொடுமைப்படுத்துதல்.
    3-இரத்தப்பழியால் நகரைக் கட்டி அமைத்தல்.
    4-அடுத்தவரை குடிவெறியர்களாக்குதல்
    5-சிலை வழிபாடு. (2:6-19)


8) அபக்கூக்கு 3:17-19 அதிகாரத்தில் கூறுவது யாது?
   
"அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
     திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும்,
     ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
     வயல்களில் தானியம் விளையாவிடினும்,
     கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
     தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
     நான் ஆண்டவரில் களிகூர்வேன்;
     என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
     ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை;
     அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்;
     உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்."
Free Blog Widget
Stats Counter
hit counter