யோவான்
1) யோவான் என்பவர் யார்?
கடவுளால் அனுப்பப்பட்டவரும் சீடரும் ஆவார். (1:6)
2) யோவான் இந்நற்செய்தியைத் தவிர, வேறு புதிய ஏற்பாட்டு
நூல்கள் ஏதேனும் எழுதினாரா?
ஆம், மூன்று திருமுகங்களும், திருவெளிப்பாடும் எழுதியவர்
இவரே.
3) யோவான் தன்னுடைய நற்செய்தியை எவ்வாறு ஆரம்பிக்கின்றார்?
"தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு
இருந்தது: அவ்வாக்கு கடவுளாயுமிருந்தது". (1:1)
4)"வாக்கு" என்பதன் பொருள் என்ன?
தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன்.
5) "வாக்கு மனுவுருவானார்" என்றால் என்ன?
தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன் மனிதரானார்
என்பது பொருள்.
6) திருமுழுக்கு யோவானைப்பற்றி உரைத்தது யார்?
எசாயா இறைவாக்கினர். (1:23)
7) எசாயா இறைவாக்கினர் திருமுழுக்கு சேயாவானைப்பற்றி
உரைத்தது என்ன?
ஆண்டவருக்காக வழியை செம்மையாக்குங்கள் என பாலை
நிலத்தில் குரல்
ஒன்று கேட்கின்றது. (1:23)
8) யோவான் இயேசுவைப்பற்றி கூறியது என்ன?
" இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். (1:29)
9) " கேபா" என்றால் என்ன?
" பாறை" என்பது பொருள். (1:42)
10) பிலிப்பு எந்த ஊரைச் சேர்ந்தவர்?
பெத்சாயிதா. (1:44)
11) பிலிப்பு இயேசுவிடம் யாரை அழைத்து வந்தார்?
நத்தனியேல். (1:45)
12) நத்தனியேல் தம்மிடம் வருவதைக் கண்ட இயேசு, அவரை
குறித்து
கூறியது என்ன?
" இவர் உண்மையான இஸ்ராயேலர், கபடற்றவர்" (1:47)
13) இயேசு செய்த முதல் புதுமை என்ன?
கானாவூரில் தண்ணீரை திராட்சை இரமாக மாற்றியது. (2:11)
14) இயேசு எத்தனை தண்ணீர் நிறைந்த கல்தொட்டிகளை,
திராட்சை
இரசமாக மாற்றினார்?
ஆறு. (2:6)
15) ஜெருசலேம் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள்
எடுத்தன?
46 ஆண்டுகள். (2:20)
16) இரவில் இயேசுவைக் காண வந்தவர் யார்?
நிக்கொதேமு. (3:1)
17) யோவான் எங்கே திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்?
சலீம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள அயினோன் என்னும்
இடத்தில். (3:23)
18) இயேசு சமாரியப் பெண் ஒருவரை, மனமாற்றிய ஊர் எது?
சிக்கார் (4:5)
19) இயேசு சமாரியப் பெண்ணிடமிருந்து கேட்டது என்ன?
தண்ணீர் கேட்டார். (4:7)
20) இயேசு அப் பெண்ணிற்கு என்ன கொடுப்பதாக வாக்களித்தார்?
வாழ்வு தரும் தண்ணீர். (4:7)
21) சிக்கார் என்னும் ஊரில் இயேசு எத்தனை நாட்கள்
தங்கியிருந்தார்?
இரண்டு நாட்கள். (4:43)
22) ஐந்து மண்டபங்கள் கொண்ட பெற்சதா என்னும் குளம்
எங்கே
இருந்தது?
எருசலேமில், ஆட்டு வாயிலுக்கு அருகில். (5:42)
23) சிறுவன் ஒருவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும்
இரண்டு
மீன்களும் உள்ளன என இயேசுவிடம் கூறியது
யார்?
ஆந்திரேயா. (6:8)
24) இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களை கொண்டு எத்தனை
பேருக்கு உணவளித்தார்?
ஏறக்குறைய ஐயாயிரம். (6:10)
25) இயேசு மக்களுக்கு எவ்வகையான உணவு அளிப்பதாக
வாக்களித்தார்?
தனது சதையை உணவாகக் கொடுக்க வாக்களித்தார் (6:51)
26) இதைக் கேட்ட மக்கள் இயேசுவை நம்பினார்களா?
இல்லை. பலர் அவரை விட்டு விலகினர். (6:66)
27) யூதாசைப்பற்றி இயேசு கூறியது என்ன?
உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான். (6:70)
28) விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம்
கூட்டிக்
கொண்டு வந்த மக்களிடம், அவர் கூறியது என்ன?
" உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் கல் எறியட்டும்.(8:7)
29) உம் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்ட யூதர்களுக்கு,
இயேசு அளித்த மறுமொழி என்ன?
"என்னை உங்களுக்கு தெரிந்திருந்தால், ஒருவேளை என்
தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார். (8:19)
30) " உனக்கு இன்னும் 50 வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக்
கண்டிருக்கிறாயா"? என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு அளித்த
பதில் என்ன?
"
ஆபிரகாம்
பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார்.
(8:58)
31) ஏழை பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறந்தது ஏன்?
கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே, இப்படிப்
பிறந்தார். (9:3)
32) மார்த்தா, மரியா என்னும் இவர்களின் சகோதரர்கள் யார்?
லாசர். (11:2)
33) இயேசு பெத்தானியாவுக்கு செல்வதாகக் கூறிய பொழுது, தோமா
மறுமொழியாகக் கூறியது என்ன?
" நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். (11:16)
34) பெத்தானியாவுக்கு ஜெருசலேமிலிருந்து எவ்வளவு
தொலைவு?
ஏறக்குறைய மூன்று கிலோ மீற்றர் (11:18)
35) லாசர் கல்லறையில் எத்தனை நாள் வைக்கப்பட்டிருந்தார்?
நான்கு நாட்கள். (11:17)
36) இயேசு லாசரிடம் கூறியது என்ன?
" லாசரே, வெளியே வா" என்றார். (11:43)
37) மரியாள் எப்பொழுது இயேசுவின் காலடிகளை நறுமணத்தைலம்
கொண்டு பூசினார்?
பாஸ்கா விழாவுக்கு 6 நாட்களுககு முன்பு. (12:1)
38) மரியாள் கொண்டு வந்த நறுமணத்தைலத்தின் அளவு என்ன?
ஏறக்குறைய 320 கிராம். (12:3)
39) இத்தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என
யூதாஸ்
கூறினார்?
300 தெனாரியத்திற்கு. (12:5)
40) குருத்து ஞாயிறு அன்று இயேசு எவ்வாறு ஜெருசலேமுக்குள்
நுழைந்தார்?
ஒரு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி அங்கு சென்றார். (12:4)
41) மக்கள் இயேசுவை எவ்வாறு வாழ்த்தினார்கள்?
" ஓசான்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக!
இஸ்ராயேலின் அரசர் போற்றப் பெறுக" என்று சொல்லி
ஆர்ப்பரித்தனர். (12:13)
42) " ஓசான்னா!" என்னும் எபிரேய சொல்லுக்கு பொருள்
என்ன?
" விடுவித்தருளும்" என்பது பொருள் (12:13)
43) இயேசு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி ஜெருசலேமுக்குள்
நுழைவார் என முன்னறிவித்தது யார்?
சக்கரியா (12:15)
44) இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின்,
அவர்களுக்கு
கூறியது என்ன?
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக்
கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவர்களுடைய
காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்(13:14)
45) இயேசு தன் சீடர்களுக்கு அளித்த புதிய கட்டளை என்ன?
" நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும் ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (13:34)
46) " ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று
பிலிப்பு
கேட்ட பொழுது, மறுமொழியாக இயேசு கூறியது
என்ன?
" என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். (14:9)
47) இயேசுவின் பார்வையில் அவரை உண்மையிலே அன்பு செய்பவர்
யார்?
அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள். (14:15)
48) தன்னுடைய சீடர்களோடு என்றும் இருக்க யாரை அனுப்புவதாக
இயேசு வாக்களித்தார்?
தூய ஆவியை அனுப்புவதாக வாக்களித்தார். (47:16)
49) இயேசு தம் சீடர்களுக்காக தந்தையிடம் வேண்டுவதை,
எந்த
அதிகாரத்தில் காணலாம்?
17ம் அதிகாரம்.
50) சீமோன் பேதுறு வலக்காதை வெட்டிய தலைமைக்குருவின்
பணியாளர் பெயர் என்ன?
மால்கு (18:10)
51) இயேசு கைது செய்யப்பட்ட பிறகு அவரை யாரிம்
கொண்டு
சென்றனர்?
அன்னாவிடம். (18:13)
52) இயேசுவைக் கன்னத்தில் அறைந்தது யார்?
காவலருள் ஒருவர். (18:22)
53) பேதுறு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தார்?
3 முறை. (18:13-18)
54) யாரை விடுதலை செய்யுமாறு மக்கள் கேட்டனர்?
பரபாசை. (18:40)
55) இயேசு குற்றமற்றவர் என பிலாத்து அறிந்திருந்தாரா?
ஆம். (19:6)
56) இயேசுவின் சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தவர்கள்
யாவர்?
1) இயேசுவின் தாய்
2) கிளையேபாவின் மனைவி மரியா
3) மக்தலா மரியா
4) இயேசுவின் அன்புச் சீடர் யோவான் (19:25-26)
57) இயேசு தன் தாயிடமும், அன்புச் சீடர் யோவானிடமும்
கூறியது
என்ன?
தம் தாயிடம் " அம்மா இவரே உன் மகன்" என்றார்.
தம் சீடரிடம் " உன் தாய்" என்றார். (19:26-27)
58) இயேசு சிலுவையில் இருந்து கூறிய கடைசி வார்த்தை என்ன?
" எல்லாம் நிறைவேறிற்று" (19:30)
59) இயேசுவின் அடக்கத்திற்கு நிக்கொதெம் கொண்டு வந்தது
என்ன?
வெள்ளைப்போளமும் சந்தணத் தூளும் கலந்த ஏறக்குறைய
30கிலோ கிராம் கொண்டு வந்தார். (19:39)
60) கல்லறைக்குள்ளே மக்தலதமரியா கண்டது என்ன?
வெண்ணாடை அணிந்த இரு வானதூதரைக் கண்டார். (20:2)
61) மக்தலா மரியா இயேசுவைக் கண்டாரா?
ஆம், தன்னை பெயர் சொல்லி அழைத்த இயேசுவைக் கண்டார்.
(20:16)
62) " ரபூனி" என்ற எபிரேயச் சொல்லுக்கு பொருள் என்ன?
" போதகரே" என்பது பொருள். (20:16)
63) இயேசு உயிர்த்தெழுந்த நாள் அன்று தம் சீடர்களுக்கு
தோன்றியபொழுது, ஒருவர் மட்டும் அங்கு இல்லை, அவர்
யார்?
திதீம் என்னும் தோமா. 20:24)
64) எட்டு நாளுக்குப் பிறகு, இயேசு மீண்டும் தம் சீடர்கள்
தோன்றியபொழுது, அவர் தோமாவிடம் கூறியது என்ன?
" இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு" என்றார். (20:27)
65) தோமா மறுமொழியாகக் கூறியது என்ன?
" நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (20:28)
66) பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் எத்தனை மீன்கள்
பிடித்தனர்?
153 (21:11)
67) இயேசு உணவருந்திய பின் சீமோன் பேதுறுவைப் பார்த்துக்
கூறியது என்ன?
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், என் ஆடுகளைப்
பேணிவளர்" என்றார். (21:15-17)
68) " ஆட்டுக்குட்டிகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்?
கிறிஸ்தவர்களை.
69) " ஆடுகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்?
ஆயர்களை.
70) " நசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்னும்
வசனம் எந்தெந்த
மொழிகளில் எழுதப்பட்டது?
எபிரேயம், லத்தீன், கிரேக்கம். (19:20) |