maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

சாலமோனின் ஞானம்

1) மக்கபேயர் என்பதன் பொருள் என்ன?
    மக்கபேயர் என்பதன் பொருள் "சுத்தியல், சம்மட்டி" என்பதாகும்.

2) மக்கபேயர் என்னும் நூலின் உள்ளடக்கம் என்ன?
   அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி, யோவான் இர்க்கான்
   ஆட்சிப் பொறுப்பு ஏற்றது வரை (175-134) யூத வரலாற்றில் இடம்
   பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது.

3) அலெக்ஸ்சாண்டர் என்பவர் யார்?
    மாசிடோனியராகிய பிலிப்புவின் மகன் (1:1)

4) அலெக்ஸ்சாண்டர் தனது பேரரசை பிரிக்குமாறு கூறியது ஏன்?
    அவர் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் இறக்கும் தறுவாயில் 
    இருந்ததால். (1:7)

5) அலெக்ஸ்சாண்டருக்குப் பிறகு சிரியாவை ஆண்ட மன்னர் யார்?
   அந்தியோக்கு எப்பிபான் (1:10)

6) சில இஸ்ராயேலர் செய்தது என்ன?
   அவர்களைச் சுற்றி இருக்கும் வேற்றினத்தாரோடு உடன்படிக்கை
   செய்து கொண்டனர். (1:11)

7) ஜெருசலேமில் இருந்த ஆண்டவரின் இல்லத்தை அந்தியோக்கு
     தாக்கியது எப்பொழுது?

    கி.மு. 143ம் ஆண்டில். (1:2)

8) ஆண்டவரின் இல்லத்தில் இருந்து அந்தியோக்கு கொண்டு சென்றது
     என்ன?

    வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட அனைத்துப்  
    பொருட்களையும் எடுத்துச் சென்றான். (1:23)

9) எருசலேம் மாநகரை தீக்கிரையாக்கியவர் யார்?
    அந்தியோக்கு மன்னனின் படை வீரருள் ஒருவர். (1:29)

10) மன்னன் பிறப்பித்த ஆணை என்ன?
     சிலைகளை வழிபடுமாறு கட்டளையிட்டார். (1:41)

11) மன்னனின் கட்டளைகளை மீறுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட
      தண்டனை என்ன?

     சாவு . (1:50)

12) மத்தத்தியா என்பவர் யார்?
     மோதயினில் வாழ்ந்த ஒரு குருவானவர். (2:1)

13) மத்தத்தியாவின் மைந்தர்கள் யாவர்?
      காத்தி என்ற யோவானும்,
      தாசீ என்ற சீமோனும்,
      மக்கபே என்ற யூதாவும்,
     அவரான் என்ற எலயாசரும்,
     அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.(2:2)

14) மோதயினில் நடந்தது என்ன?
      கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக்
      கட்டாயப்படுத்துவதற்காக, மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள்,
      மக்களைப் பலி செலுத்தவைக்க மோதையின் நகருக்கு
      சென்றார்கள். (2:15)

15) இதற்கு மத்தத்தியா கூறிய பதில் என்ன?
     நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள்
     மூதாதையர்களின் உடன்படிக்கையின் படியே நடப்போம். (2:20)

16) மத்தத்தியா இவ்வாறு கூறிய பிறகு அவர் செய்தது என்ன?
      மன்னனின் அலுவலனைக் கொன்று, பலிப்பீடத்தையும் இடித்துத்
      தள்ளினார். (2:25)

17) மன்னனின் அலுவலனைக் கொன்றபிறகு மத்தத்தியா எங்கு
     சென்றார்?

     அவரும் அவருடைய மைந்தர்களும், நகரில் இருந்த தங்கள்
      உடமைகளை யெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்கு தப்பி
      ஓடினார்கள். (2:28)

18) மத்தத்தியா இறந்த பிறகு, மக்களுக்கு தலைவராக இருந்தவர்
      யார்?

      அவருடைய மகன் சிமியோன். (2:65)

19) படைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
      யூதா மக்கபே. (2:66)

20) இஸ்ராயேலரோடு போரிட சமாரியாவிலிலுந்து வந்த படையை
      எதிர்க்க யாரைத் தலைவனாக ஏற்படுத்தப்பட்டது?

      அப்பொல்லோன். (3:10)

21) அந்தப் போரின் முடிவு  என்ன?
      அப்பொல்லோன் போரில் கொலை செய்யப்பட்டார். (3:11)

22) சமாரியர்களை மறுபடியும் யூதா எங்கே தோற்கடித்தார்?
      எம்மாவுஸ் சமவெளியில். (4:3)

23) யூதா ஆண்டவரின் இல்லத்தை தூய்மைப்படுத்தினாரா?
      ஆம், திருவுறைவிடத்தை தூய்மைப்படுத்தினார்கள். (4:43)

24) அந்தியோக்கு எப்பித்தான் இறந்தது எப்படி?

      பாரசீக நாட்டு எலிமாய் நகரோடு போர் தொடுத்து போரில்
      தோல்வியடைந்த கவலையினால் அவர் உயிர் விட்டார். (6:1-16)


 





 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter