1) மக்கபேயர் என்பதன் பொருள் என்ன?
மக்கபேயர் என்பதன் பொருள் "சுத்தியல், சம்மட்டி" என்பதாகும்.
2) மக்கபேயர் என்னும் நூலின் உள்ளடக்கம்
என்ன?
அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி, யோவான் இர்க்கான்
ஆட்சிப் பொறுப்பு ஏற்றது வரை (175-134) யூத வரலாற்றில் இடம்
பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது.
3) அலெக்ஸ்சாண்டர் என்பவர் யார்?
மாசிடோனியராகிய பிலிப்புவின் மகன் (1:1)
4) அலெக்ஸ்சாண்டர் தனது பேரரசை
பிரிக்குமாறு கூறியது ஏன்?
அவர் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் இறக்கும் தறுவாயில்
இருந்ததால். (1:7)
5) அலெக்ஸ்சாண்டருக்குப் பிறகு
சிரியாவை ஆண்ட மன்னர் யார்?
அந்தியோக்கு எப்பிபான் (1:10)
6) சில இஸ்ராயேலர் செய்தது என்ன?
அவர்களைச் சுற்றி இருக்கும் வேற்றினத்தாரோடு உடன்படிக்கை
செய்து கொண்டனர். (1:11)
7) ஜெருசலேமில் இருந்த ஆண்டவரின் இல்லத்தை
அந்தியோக்கு
தாக்கியது எப்பொழுது?
கி.மு. 143ம் ஆண்டில். (1:2)
8) ஆண்டவரின் இல்லத்தில் இருந்து அந்தியோக்கு
கொண்டு சென்றது
என்ன?
வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட அனைத்துப்
பொருட்களையும் எடுத்துச் சென்றான். (1:23)
9) எருசலேம் மாநகரை தீக்கிரையாக்கியவர்
யார்?
அந்தியோக்கு மன்னனின் படை வீரருள் ஒருவர். (1:29)
10) மன்னன் பிறப்பித்த ஆணை என்ன?
சிலைகளை வழிபடுமாறு கட்டளையிட்டார். (1:41)
11) மன்னனின் கட்டளைகளை மீறுபவர்களுக்கு
கொடுக்கப்பட்ட
தண்டனை என்ன?
சாவு . (1:50)
12) மத்தத்தியா என்பவர் யார்?
மோதயினில் வாழ்ந்த ஒரு குருவானவர். (2:1)
13) மத்தத்தியாவின் மைந்தர்கள் யாவர்?
காத்தி என்ற யோவானும்,
தாசீ என்ற சீமோனும்,
மக்கபே என்ற யூதாவும்,
அவரான் என்ற எலயாசரும்,
அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.(2:2)
14) மோதயினில் நடந்தது என்ன?
கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக்
கட்டாயப்படுத்துவதற்காக, மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள்,
மக்களைப் பலி செலுத்தவைக்க மோதையின் நகருக்கு
சென்றார்கள். (2:15)
15) இதற்கு மத்தத்தியா கூறிய பதில்
என்ன?
நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள்
மூதாதையர்களின் உடன்படிக்கையின் படியே நடப்போம். (2:20)
16) மத்தத்தியா இவ்வாறு கூறிய பிறகு
அவர் செய்தது என்ன?
மன்னனின் அலுவலனைக் கொன்று, பலிப்பீடத்தையும் இடித்துத்
தள்ளினார். (2:25)
17) மன்னனின் அலுவலனைக் கொன்றபிறகு
மத்தத்தியா எங்கு
சென்றார்?
அவரும் அவருடைய மைந்தர்களும், நகரில் இருந்த தங்கள்
உடமைகளை யெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்கு தப்பி
ஓடினார்கள். (2:28)
18) மத்தத்தியா இறந்த பிறகு, மக்களுக்கு
தலைவராக இருந்தவர்
யார்?
அவருடைய மகன் சிமியோன். (2:65)