1) இத்திருமுகம் எப்பொழுது எழுதப்பட்டது?
கி.பி. 80ம் ஆண்டில் இருந்து 85ம் ஆண்டுக்குள்
எழுதப்பட்டிருக்கும்
என்று நம்பப்படுகின்றது.
2) இந்நூல் எங்கிருந்து எழுதப்பட்டது?
உரோமையில் இருந்து.
3) இத்திருமுகத்தின்
ஆசிரியர் யார்?
பவுலின் மற்றத் திருமுகங்களுக்கும் இத்திருமுகத்திற்கும்
வேற்றுமைகள்அதிகமாக இருப்பதால் இதன்
ஆசிரியர் பவுல் இல்லை
என நம்பப்படுகிறது. அது அப்பொல்லோவால் எழுதப்பட்டது
என்பார் சிலர். எனவே இக்கேள்விக்கான சரியான விடை இன்னும்
கிடைக்கவில்லை.
4) இந்நூலின் மூலக்கருத்து என்ன?
கிறிஸ்துவின் மேன்மை பழைய ஏற்பாட்டுக் குருத்துவப் பலியை
விட கிறிஸ்துவின் ஒரேபலி மேன்மையானது எனபதை
வலியுறுத்துகின்றது.