maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

 

யாக்கோபு


1. யாக்கோபு என்பவர் யார்?
     மரபுக் கருத்துப்படி, யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்: 
   அப்போஸ்தலர்களிள்   ஒருவர்.

2. யாக்கோபு திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
    கி.பி. 50

3. தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எது என யாக்கோபு கூறுகிறார்?
    துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும்,
    உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக்கொள்வதும் ஆகும்.(1:27)

4. அடுத்திருப்பவர்மேல் அன்பு கூர்வதைப்பற்றிய சட்டம் என்ன?
    « உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும்
      அன்பு  கூர்வாயாக » (2:8)

5. ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினால் அவர் குற்றமானவரா?
    ஆம் , அவர் அனைத்தையும் மீறிய குற்றத்திற்குள்ளாவார். (2:10)

6. செயலில்லாத நம்பிக்கையினால் என்ன பலன்?
    ஒரு பலனும் இல்லை. உயிர் இல்லாத உடல்போல,
    செயல்களில்லாத நம்பிக்கையும் கெட்டதே. (2:26)

7. செயல்களில்லாத நம்பிக்கை கெட்டது என்பதை நிரூபிக்க
     யாக்கோபு தரும்  உதாரணம் என்ன?

    ராக்காபு என்ற விலை மகள் தூதர்களை வரவேற்று வேறுவழியாக
   அனுப்பிய போது செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவர்
   ஆனார். (2:25)

8. பலர் போதகர்களாக மாறவேண்டாம் என யாக்கோபு கூறக்
    காரணம் என்ன?

    ஏனெனில் போதகர்கள் மிகக் கண்டிப்பாக தீர்ப்புக்கு ஆளாவார்கள்.
     (3:1)

9. தந்தையாகிய ஆண்டவரைப் போற்றுவதும் தூற்றுவதும் எது?
    நாவு. (3:9

10. விண்ணில் இருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?
      தூய்மை. (3:17)

11. யாக்கோபு நோயுற்றோர்களைப் பற்றிக் கூறுவது என்ன?
     « உங்களுள் யாரேனும் நோயுற்று இருந்தால் திருச்சபையின்
    மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால்
     அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். (5:14)

 






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter