maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

 

 

1) உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் மையக் கருத்து என்ன?
     இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்தி.

2) இத்திருமுகம் எப்பொழுது எழுதப்பட்டது?
    கி.பி. 57-58ம் கால கட்டத்தில் எழுதியிருக்கலாம்.

3) பவுல் உரோமையருக்கு தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்?
    இயேசுக்கிறிஸ்துவின் பணியாளன். (1:1)

4) பவுல் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
    திருத்தூதராக இருக்க. (1:1)

5) சீடத்துவத்திற்கு முக்கிய அடிப்படை என பவுல் கூறுவது என்ன?
     இயேசுக்கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல்.

6) பிறஇனத்தவர் செய்த பாவம் என்ன?
    படைத்தவரை மறந்து, படைக்கப்பட்டவற்றை வணங்கினார்கள்.

7) நேர்மையுடையோர் எவ்வாறு வாழ்வு அடைவர்?
     தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர். (1:17)

8) பிறர் குற்றவாளியெனத் தீர்ப்பு அளிப்போரைப் பற்றி பவுல்
    கூறுவது என்ன?

    பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது, அவர்கள் அவர்களுக்கே
    தண்டனைத் தீர்ப்பை  அளித்துக் கொள்கிறார்கள். (2:1)

9) பிறஇனத்தார் திருச்சட்டத்தை, எவ்வாறு அறிந்து கொள்கின்றனர்?
    திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ளது. (2:5)

10) நம்பிக்கை தேவையென வலியுறுத்துவதன் மூலம்,
      திருச்சட்டத்தை  செல்லாததாக்குகிறோமா?

     இல்லை: இவ்வாறு செய்வதன் மூலம், திருச்சட்டத்தை நிலை
     நாட்டுகிறோம். (3;:31)

11) கடவுள் ஆபிரகாமை நிதியாளராக கருதக் காரணம் என்ன?
      அவர் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால்தான். (4:3)

12) கிறிஸ்து நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்றியது
        எப்படி?

      தம் உயிரைக் கொடுத்து நம்மைக் கடவுளுக்கு
      ஏற்புடையவர்களாக்கினார். (5:8)

13) கிறிஸ்தவர்கள் தங்களைப் பொறுத்தமட்டில் எவ்வாறு எண்ண
      வேண்டும்?

      பாவவாழ்க்கையைப் பொறுத்த மட்டில் இறந்தவர்களாகவும்,
     கிறீஸ்து  இயேசுவோடு  இணைந்து கடவுளுக்காக 
     வாழ்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ள வேண்டும். (6:11)

14) பாவத்திற்கு கிடைக்கும் கூலி என்ன?
      சாவு. (6:23)

15) �அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! என பவுல் கூறியது ஏன்?
       ஏனெனில் அவர் தம் ஊனியல்பால் பாவத்தின் சட்டத்திற்கு
       கட்டுப்பட்டிருந்தார்.  (7:24)

16) நாம் இறைவனுக்குரியோர் என்பதற்கு அடையாளம் என்ன?
      கடவுளின் ஆவி நம்முள் குடிகொண்டிருப்பது. (8:9)

17) இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் பற்றி பவுல் கூறுவது என்ன?

     இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக
     வெளிப்படப் போகிற  மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை� (8:18)

18) பெயிபா என்னும் சகோதரி யார்?
      இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத் தொண்டராக
      இருந்தவர்.  (16:1)

19) நான் பிறஇனத்தாராகிய உங்களுக்கு திருத்தூதன்� என்று பவுல்
      கூறும் இவ்வார்த்தைகள் காணப்படும் அதிகாரத்தையும்
      வசனத்தையும் குறிப்பிடு:

       அதிகாரம் 11 வசனம் 13.

20) தீமையை வெல்வது எப்படி?
        நன்மையால் தீமையை வெல்லலாம். (12:21)

21) நம் எதிரிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்று பவுல்
       கூறுகிறார்?

       அவர்களுக்கு ஆசி கூறவேண்டும். (12:14)

22) ஆளும் அதிகாரம் உள்ளவர்க்கு பணிந்திருக்குமாறு பவுல்
      கூறுவது ஏன்?

      ஏனெனில் அதிகாரம் கடவுளிடமிருந்தே வருகின்றன. (13:1)

23) கடவுளின் கட்டளைகள் அனைத்தும், எந்தவொரு கட்டளையில்
      அடங்கும்?

     உன் மீது அன்பு கூருவதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும்
     அன்பு  கூருவாயாக.  (13:9)






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter