1) கொரிந்தியருக்கு எழுதிய மொத்தத் திருமுகங்கள் எத்தனை?
2 திருமுகங்கள்
2) இத் திருமுகங்களை எப்பொழுது எழுதினார் ?
கி.பி. 57ல்
3) இத் திருமுகங்களை பவு ல் எங்கிருந்து எழுதினார்
?
எபேசு நகரத்தில் இருந்து எழுதினார் .
4) பவுல் கொரிந்து மக்களுக்கு விடுத்த முதல்
வேண்டுகோள் என்ன?
"நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள்
வேண்டாம். ஒரேமனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். (1:10)
5) பவுல் கொரிந்து நகரில் யாருக்கு
திருமுழுக்கு வழங்கினார் ?
கிறிஸ்பு, காயூ மற்றும் தேவானா வீட்டாருக்கும். (1:14)
6) பவுல் தான் அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன
என்று கூறுகிறார் ?
நற்செய்தி அறிவிக்கவே அனுப்பப்பட்டேன் என்கிறார் . (1:17)
7) பவுல் பரத்தைமையை கண்டிப்பது ஏன்?
இதில் ஈடுபடுபவர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர் .
உடல் தூய ஆவி குடிகொள்ளும்கோவில். (6:18-19)
8) திருமணத்தைப்பற்றி பவுல் கற்பித்தது என்ன?
ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழவேண்டும்:
பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழவேண்டும். (7:2)
9) திருமணமானவர்களைப் பற்றி கடவுள் பவுலுக்கு
கொடுத்த கட்டளை என்ன?
"மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக் கூடாது" (7:10)
10) பவுல் இயேசுவைப் பார் த்திருக்கிறாரா?
ஆம், அவரே இயேசுவைக் கண்டதாகக் கூறினார் . (9:1)
11) விடுதலைப் பயணத்தின்போது மக்கள் அழிந்ததுபோல,
கடவுள் ஒரேநாளில்
23,800பேரை அழிக்கக் காரணம் என்ன?
அவர்கள் பரத்தைமையில் ஈடுபட்டதால். (10:8)
12) ஆண்டவரின் திருவிருந்தில் பங்கெடுப்பதைப்
பற்றி, பவுல் கூறுவது என்ன?
"எவராவது தகுதி யற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால், அல்லது
ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின்
உடலுக்கும்,
இரத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார் .
(11:27)
13) நாம் வெவ்வேறு கொடைகளை பெற்றுள்ளவராயினும்,
ஒற்றுமையோடு
உழைக்கவேண்டும் என்பதை, பவுல் எவ்வு உதாரணத்தைக்
கொண்டு
தெளிவுபடுத்துகிறார் ?
உடல் ஒன்றே: உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல்
ஒன்றாக இருப்பது போல, கிறிஸ்துவும் இருக்கிறார் " என்ற
உவமையைப்
பயன்படுத்துகிறார் (12:12)
14)"கொடைகளில் எல்லாம் தலை சிறந்த கொடை" என
பவுல் எதைக்
குறிப்பிடுகிறார் ?
அன்பு (13:13)
15) இயேசு உயிர்த்த பிறகு அவர் முதன்முதலில்
யாருக்கு தோன்றினார் ?
கேபாவுக்கு தோன்றினார் . (15:5)
16)"தாம் திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்"
என்று பவுல் கூறக்
காரணம் என்ன?
ஏனெனில் அவர் கடவுளின் திருச்சபையை துன்புறுத்தினார் .(15:9)
17) ஆண்டவரிடம் அன்பு செலுத்தாததைப் பற்றி பவுல்
கூறுவது என்ன?
"அவர் சபிக்கப்படுக" என்கிறார் . (16:22)
18)"மாறனாத்தா" என்பதன் பொருள் என்ன?
"ஆண்டவரே வருக" என்று பொருள். (16:22)